Published : 13 Dec 2014 11:45 AM
Last Updated : 13 Dec 2014 11:45 AM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்களிடையே, பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.
துணிப் பை, சணல் பை மற்றும் தூக்குப் பைகளை எடுத்து வரும் பக்தர்களுக்கு, அதிர்ஷ்ட முறையில் 3 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 24 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணங்கள் பரிசாக வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் இணைந்து அறிவித்தது.
அதன்படி கூப்பன் வழங்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்கள்: தங்க நாணயம் பரிசு பெறும் எண்கள்- 262321, 130229, 195348. வெள்ளி நாணயம் பரிசு பெறும் எண்கள்- 262027, 181959, 262105, 318597, 220706, 184596, 319201, 129016, 321086, 185864. 186336, 186446, 322414, 226655, 324228, 233675, 235548, 235929, 267468, 267578, 193366, 238481, 268752, 328876.
இந்த கூப்பன்களை வைத்திருப் பவர்கள் திருவண்ணாமலை வேங்கிக் கால் அசோக் நகரில் செயல்படும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் கொடுத்து நாணயங்களை வரும் 17-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT