Published : 13 Dec 2014 11:45 AM
Last Updated : 13 Dec 2014 11:45 AM

தீபத் திருவிழாவுக்கு துணிப் பையுடன் வந்த 27 அதிர்ஷ்டசாலிகள் தேர்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்களிடையே, பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.

துணிப் பை, சணல் பை மற்றும் தூக்குப் பைகளை எடுத்து வரும் பக்தர்களுக்கு, அதிர்ஷ்ட முறையில் 3 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 24 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணங்கள் பரிசாக வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் இணைந்து அறிவித்தது.

அதன்படி கூப்பன் வழங்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்கள்: தங்க நாணயம் பரிசு பெறும் எண்கள்- 262321, 130229, 195348. வெள்ளி நாணயம் பரிசு பெறும் எண்கள்- 262027, 181959, 262105, 318597, 220706, 184596, 319201, 129016, 321086, 185864. 186336, 186446, 322414, 226655, 324228, 233675, 235548, 235929, 267468, 267578, 193366, 238481, 268752, 328876.

இந்த கூப்பன்களை வைத்திருப் பவர்கள் திருவண்ணாமலை வேங்கிக் கால் அசோக் நகரில் செயல்படும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் கொடுத்து நாணயங்களை வரும் 17-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x