Published : 09 Feb 2014 11:28 AM
Last Updated : 09 Feb 2014 11:28 AM

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் இழுபறி

புதுச்சேரியில் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து என்.ஆர்.காங்கிரஸுக்கும் பாஜக-வுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து மோகன்ராஜுலு, கே.என்.லட்சுமணன் ஆகியோர் புதுவைக்கு வந்து ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். புதுச் சேரிக்கு தனி மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்தான் வேட்பாளரை நிறுத்தும் என பாஜக-வுக்கு நிபந்தனைகளை விதித்திருந்தார் ரங்கசாமி.

ரங்கசாமியிடம் தேர்தல் கூட்டணி குறித்து கேட்டதற்கு, ‘’புதுவையின் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு மாநில அந்தஸ்தை பெறுவதில்தான் உள்ளது. இதன் மூலம் புதுவைக்கு ஒட்டுமொத்த வளர்ச்சி கிடைக்கும் அதற்காக என்.ஆர்.காங்கிரஸ் குரல் டெல்லியில் ஒலிக்கும். தேர்தல் கூட்டணி குறித்து தக்க சமயத்தில் அறிவிப்பேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x