Published : 23 Dec 2014 11:03 AM
Last Updated : 23 Dec 2014 11:03 AM

நிலுவையில் உள்ள கோப்புகளை முடிக்க அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

3 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி யுள்ள உத்தரவில் கூறியிருப் பதாவது: மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 3 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கோப்பு களை பிரிவு வாரியாக பட்டிய லிட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இதேபோல், உதவி தொடக்கக்கல்வி அலுவலகங் களிலும் 3 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள கோப்பு களை பிரிவு வாரியாக பட்டிய லிட்டு உடனடியாக முடிக்கு மாறு அனைத்து உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உதவி தொடக்கக்கல்வி அலுவ லகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளை முடித்த விவரங் களை டிசம்பர் 26-ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் இயக்குநருக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x