Published : 18 Dec 2014 10:34 AM
Last Updated : 18 Dec 2014 10:34 AM

காந்தப் படுக்கை மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் தொழிலதிபர் ஆஜர்

சென்னையில் பள்ளி ஆசிரியரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அருளானந்தத்தை காந்தப் படுக்கை மோசடி வழக்குக்காக நேற்று திருச்சி கோர்ட்டில் போலீஸார் ஆஜர் செய்தனர்.

கடந்த மாதம் 20-ம் தேதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 8-ம் வகுப்பு மாணவரை பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் பாஸ்கரன் கண்டித்தார். இதையடுத்து மாணவரின் தந்தை அருளானந்தத்தின் ஆதரவாளர்கள் பள்ளிக்குள் புகுந்து உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கரை அடித்து உதைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அருளானந்தத்தை தனிப்படை போலீஸார் கடந்த மாதம் 30-ம் தேதி இரவு, திருச்சியில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

2003-ம் ஆண்டு காந்தப் படுக்கை விற்பனையில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக திருச்சி நீதிமன்றத்தில் அருளானந்தம் உட்பட 7 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. நேற்று திருச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருளானந்தத்தை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x