ஆயுள் கைதி கொலை தொடர்பாக 18 பேரிடம் விசாரணை

ஆயுள் கைதி கொலை தொடர்பாக 18 பேரிடம் விசாரணை
Updated on
1 min read

ஜவ்வாது மலையில் ஆயுள் தண்டனைக் கைதி கொல்லப்பட்ட வழக்கில் 18 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ள தம்புகொட்டான்பாறை என்ற கிராமத்தில் வசித்தவர் ஜெயபால்(35). இரட்டைக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

அவர், கடந்த 26ம் தேதி இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கொலை யாளிகளைப் பிடிக்க இரு டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஜெயபாலின் 2-வது மனைவி ரோஜா, உறவினர் பாபு உட்பட 18 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in