Published : 23 Dec 2014 08:57 AM
Last Updated : 23 Dec 2014 08:57 AM

நெப்போலியன் கூறியது தவறு: மு.க. அழகிரி கோபம்

பாஜகவில் சேர நான் ஆசிர்வதித்து அனுப்பியதாக நடிகர் நெப்போலியன் கூறியது தவறு. அவரைப் பார்த்தே ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கோபமாகத் தெரி வித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது, பாஜகவில் இணைவது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் பேசினேன். என்னை அவர்தான் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார் என நெப்போலியன் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அழகிரியிடம் கேட்டபோது, நெப்போலியன் கூறியது தவறு. அடுத்தக் கட்சிக்கு ஆள் பிடித்து விடுவதுதான் என் வேலையா? நெப்போலியன் அவரது பிறந்த நாளில்தான் என்னை சந்தித்தார். அவரை பார்த்தே ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. அவர் என்னுடன் பேசவும் இல்லை. முன்னாள் எம்பி ரித்தீஷ் அதிமுகவில் இணைந்தபோதும் இப்படித்தான் கூறினார். திமுகவில் உள்கட்சி ஜனநாயகம் வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். திமுகவில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி அதைக் களைய வேண்டும் எனக் கூறி வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x