Published : 23 Dec 2014 11:30 AM
Last Updated : 23 Dec 2014 11:30 AM

வாள் போட்டியில் மாநகராட்சி ஊழியருக்கு தங்கம்

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான வீல்சேர் வாள் வீசும் போட்டியில் சென்னை மாநகராட்சி தட்டச்சர் பி.சந்திரகுமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையைச் சேர்ந்தவர் பி.சந்திரகுமார். மாற்றுத் திறனாளியான இவர் சென்னை மாநகராட்சி கட்டிடத் துறையில் தட்டச்சராக வேலை செய்து வருகிறார். இவர் 2009-ல் பெங்களூரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச வீல்சேர் வாள்வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

தற்போது இந்த மாதம் 7 முதல் 10-ம் தேதி வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வீல்சேர் வாள் வீசும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பதக்கம் வென்ற சந்திரகுமாருக்கு மாநகராட்சி ஊழியர்கள், விளையாட்டுத்துறை வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x