Published : 14 Dec 2014 12:39 PM
Last Updated : 14 Dec 2014 12:39 PM

டெஸ்ட் தொடரிலிருந்து கிளார்க் விலகல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 2-வது டெஸ்ட் போட்டிக்கு ஷான் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பிராட் ஹேடின், எஞ்சிய போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.

முதல் நாள் போட்டியின் கடைசி நாளான நேற்று 44-வது ஓவரின்போது கிளார்க்கின் வலது தொடைப் பகுதியில் தசைநார் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தசைநார் முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தனது காயம் குறித்துப் பேசிய கிளார்க், “நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாமல் போகலாம். எனினும் கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கான எல்லாவற்றையும் செய்வேன். எனது ஸ்கேன் சோதனை முடிவுகளை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். எவ்வளவு காலம் நான் ஓய்வில் இருக்க வேண்டும் என தெரியவில்லை. உலகக் கோப்பை மற்றும் எங்களின் முதல் பயிற்சி ஆட்டம் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். முத்தரப்புத் தொடரில் விளையாட விரும்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x