Published : 12 Apr 2014 11:10 AM
Last Updated : 12 Apr 2014 11:10 AM

பார்த்தசாரதி கோயில் பிரமோற்சவம்

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரமோற் சவம் வரும் 15-ம் தேதி முதல், 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 வைணவத் தலங் களில் மிகவும் பழமை வாய்ந்த கோயில் ஆகும். பிரசித்திப் பெற்ற இக்கோயிலின் பிரமோற்சவம் வரும் 15-ம் தேதி முதல், 24-ம் தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.

பிரமோற்சவத்தில், 17-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கருட சேவையும், 21-ம் தேதி காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், 23-ம் தேதி இரவு 8 மணிக்கு கண்ணாடிப் பல்லக்கு உற்சவமும், 24-ம் தேதி இரவு 7 மணிக்கு சப்தாவர்ணம் உற்சவமும் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x