Published : 29 Dec 2014 02:46 PM
Last Updated : 29 Dec 2014 02:46 PM

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை நீட்டித்து முதல்வர் உத்தரவு

மேட்டூர் அணையிலிருந்து, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களின் மூலம் தண்ணீர் திறக்கும் கால அளவை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேட்டூர் அணையிலிருந்து, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45,000 ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது அப்பகுதிகளில் நடவுசெய்யப்பட்டுள்ள நெல், விளைச்சலுக்கு தயாராகாத நிலையில் உள்ளதால் 30.12.2014 முதல் 15.1.2015 வரை தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையேற்று மேலும் 17 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x