Published : 24 Dec 2014 10:53 AM
Last Updated : 24 Dec 2014 10:53 AM
கேரள மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான முதல் கட்ட நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாநில வரிவிதிப்புத் துறை கே.பாபு கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று திருவனந்தபுரத்தில் அவர் மேலும் கூறியது: முதல்கட்ட நடவடிக்கையாக 418 பார்களில் சுகாதாரம் குறித்த ஆய்வு நடத்தப்படவுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு இந்த பார்களுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கப்படாது. சுகாதாரமாக உள்ள பார்கள் பீர், ஒயின் பார்லர்களாக மாற்றப்படும். கேரள பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் மதுவிலக்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 3 காங்கிரஸ் அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது. இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டை கூறுபவர்கள் பணத்தை யார் எந்த அமைச்சருக்கு கொடுத்தார்கள் என்பதை கூற முடியுமா? இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளை கூறி அரசை யாரும் மிரட்ட முடியாது இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT