Published : 31 Dec 2014 02:09 PM
Last Updated : 31 Dec 2014 02:09 PM

தங்கம் கடத்தல்: இலங்கையை சேர்ந்தவர் கைது

இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு 2.300 கிராம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட நபரை நேற்று சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுங்கத் துறையினர் சோதனை நடத்தி 2 கிலோ 300 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதியைச் சேர்ந்த முருகவேல் மற்றும் டெனிஸ்டன் ஆகியோரை பிடித்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பொன்குமார் (40) என்பவரை சுங்கத்துறையினர் கைதுசெய்து அவரிடம் இருந்து 690 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x