Published : 17 Dec 2014 02:58 PM
Last Updated : 17 Dec 2014 02:58 PM
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வடகரைப்புதூரை சேர்ந்த 16 வயது மாணவி திருமங்கலத்தில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ராஜா (எ) முத்துராஜாவுக்கும் (21) கடந்த 11-ம் தேதி காரியாபட்டியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அதன்பின் இருவரும் மணமகன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், பள்ளி மாணவிக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி இதுபற்றி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், அந்த மாணவியை திருமணம் செய்து கொண்ட ராஜா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT