Published : 10 Dec 2014 09:27 AM
Last Updated : 10 Dec 2014 09:27 AM

கோடியக்கரை அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படையால் 43 தமிழக மீனவர் கைது

கோடியக்கரை அருகே நடுக் கடலில் மீன் பிடித்துக்கொண்டி ருந்த நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்துச் சென்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், சுப்பிரமணியன் ஆகியோரின் 2 படகுகளில் தலா 7 பேர் என 14 மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதேபோல, காரைக்கால் கோட்டுச்சேரி மேட்டில் இருந்து ராஜீவ், சுபாஷ் ஆகியோரின் 2 படகுகளில் 19 பேரும், காசாகுடி மேடு பகுதியில் இருந்து உலகநாதன் என்பவரின் படகில் அவர் உட்பட 10 மீனவர்களும் என 29 பேர் கடந்த 7-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்களில் 15 பேரை தவிர மற்ற அனைவரும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் நேற்று மதியம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், 5 படகுகளில் இருந்த மீனவர்கள் 43 பேரையும் எல்லை தாண்டிவந்து மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்து, படகுகளுடன் இலங்கை காங்கேசன் துறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் வீரராசு நாட்டார் கூறியபோது, “இலங்கை அதிபர் ராஜபக்ச திருப்பதி கோயிலில் வழிபடுவ தற்காக இந்தியா வந்துள்ள நிலை யில், தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை யினர் சிறைபிடித்துச் சென்றுள்ளது அராஜகமான செயல்” என்றார்.

நாகை அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தாரில் ஒருவரான திருவளர்ச்செல்வன் கூறியபோது, “இன்று நாகை மாவட்ட மீனவ கிராமத்தினர் ஊர் மறியலில் ஈடுபட் டோம். அடுத்தகட்ட நட வடிக்கை குறித்து டிசம்பர்10-ல் (இன்று) நடைபெற உள்ள 6 மாவட்ட மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x