Published : 27 Dec 2014 11:10 AM
Last Updated : 27 Dec 2014 11:10 AM

திருவள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மார்ச் 7 வரை சிறப்பு சலுகை

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளில், பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களில் 2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

எனவே இந்த ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களது பதிவை வரும் 7.3.2015 - க் குள், www.tnvelaivaaipu.gov.in/Empower என்ற இணையதளம் மூலமாகவோ, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, பதிவஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு, புதுப்பித்துக்கொள்ளலாம். இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x