Published : 05 Dec 2014 01:40 PM
Last Updated : 05 Dec 2014 01:40 PM

காஷ்மீர் ராணுவ முகாம் தாக்குதலுக்கு முதல்வர் ஒமர் கண்டனம்

காஷ்மீரில் ராணுவ முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் அமைதியையும், இயல்புநிலையையும் சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் இத்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனர் என ஒமர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் ஊரி பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 7 ராணுவ வீரர்கள், 3 போலீஸ் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x