Published : 16 Dec 2014 10:15 AM
Last Updated : 16 Dec 2014 10:15 AM

அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானி லை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை பதிவு செய்யப்பட்ட மழை அளவின்படி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஆகிய பகுதிகளில் 7 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் 6 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் போளூர், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் , திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, காஞ்சி புரம் மாவட்டம் செய்யூர், திருநெல் வேலி மாவட்டம் மணிமுத்தாறு ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x