Published : 04 Dec 2014 10:49 AM
Last Updated : 04 Dec 2014 10:49 AM

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மணலி புது டவுனை சேர்ந்தவர் விஜய், இவரது மனைவி லிந்தோ (30). விஜய்யின் தங்கை ராணி. இவர்கள் 3 பேரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2012 ம் ஆண்டு காசிமேடு பழைய அமரஞ்சிபுரத்தை சேர்ந்த ஜாஸ்மின், தண்டையார் பேட்டையை சேர்ந்த கலைமதி ஆகியோரிடம் இருந்து தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ. 6 லட்சம் வாங்கினர். ஆனால் வேலை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தனர். ஜாஸ்மினும், கலைமதியும் பணத்தை திரும்பி கேட்டபோது 3 பேரும் சேர்ந்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜாஸ்மினும், கலைமதியும் காசிமேடு போலீஸில் புகார் கொடுத்தனர்.

காவல் ஆய்வாளர் ஆனந்த்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், 3 பேரும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து விஜய், லிந்தோ, ராணி ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x