Last Updated : 08 Dec, 2014 08:08 PM

 

Published : 08 Dec 2014 08:08 PM
Last Updated : 08 Dec 2014 08:08 PM

காதல் முத்தம்: ஏன் என்கிறார் ஷோபனா

முத்தம் என்பது அந்தரங்கமான விஷயம் என்று கூறிய நடிகை ஷோபனா, முத்தப் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷோபனா, செய்தியாளர்களிடம் கூறும் போது, “இதனை ஏன் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு அந்தரங்கமான விவகாரம், அந்தரங்கமான விஷயமாகும்.

இப்போது இது சரியென நீங்கள் கூறலாம், ஆனாலும், உங்கள் இருதயத்தின் அடியாழத்தில் உங்கள் மகள் இதனைச் செய்வதை (பொது இடத்தில் ஒருவருக்கு காதல் முத்தம் இடுவது) நீங்கள் விரும்ப மாட்டீர்கள்” என்றார்.

டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் இவரது பரதநாட்டிய புதிய நிகழ்ச்சியை அறிவிக்க ஷோபனா இன்று பெங்களூரு வந்தார்.

"கிஸ் ஆஃப் லவ்" பற்றி அவர் மேலும் கூறும் போது, மக்கள் இந்தப் போராட்டம் பற்றிய உண்மையான கருத்துகளைக் கூற தயங்குகிறார்கள், காரணம் அவர்கள் கூற்று திசைத்திருப்பபடலாம் அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்று அஞ்சுகின்றனர் என்றார்.

அதாவது, “உண்மையில், இது பற்றி என்ன கூற விரும்புகிறார்களோ அதனை கூறுவதில்லை, யாராவது எதாவது கருத்து கூறினால் உடனே மற்றவர்கள் அதனை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே உண்மையைக் கூற மக்களிடத்தில் அச்ச உணர்வு இருந்து வருகிறது.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x