Published : 01 Dec 2014 10:36 AM
Last Updated : 01 Dec 2014 10:36 AM
பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கும்பகோணத்தில் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்குத் தண்டனை விதித்ததற்கு மோடிதான் காரணம் என வைகோ கூறினார்.
மோடியையும், ராஜ்நாத் சிங்கையும் தொடர்ந்து ஒருமையில் விமர்சித்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை 18 நாட்களில் பிரதமர் மோடி இலங்கை அதிபரிடம் பேசி ரத்து செய்ததை கருணாநிதி மகிழ்ச்சி என்றார். முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமருக்கு நன்றி என்றார். ஆனால், வைகோ அது ஒரு நாடகம் என்கிறார்.
எனவே, தொடர்ந்து அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசி வரும் வைகோ, பாஜக கூட்டணியில் தொடர்ந்து இருப்பது குறித்து முடிவு செய்யும் நேரம் வந்துவிட்டது.
வைகோவைப் பற்றி பேசியதால் என்னை சிறையில் அடைக்க வேண்டும் என தமிழருவி மணியன் கூறியுள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக பேசி வரும் வைகோவை எந்த சிறையில் அடைக்க வேண்டும் என அவர் தான் சொல்ல வேண்டும் என்றார் ராஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT