Published : 03 Dec 2014 09:23 AM
Last Updated : 03 Dec 2014 09:23 AM

கிரிக்கெட் போட்டிக்கு தடை கோரி வழக்கு: இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

புதுக்கோட்டையைச் சேர்ந்த கே.பிரவீண்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆஸ்திரேலியாவில் நவ. 25-ல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி யில் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் பந்து வீச்சில் காயமடைந்து இறந் தார். 2 நாட்களுக்கு முன் இஸ்ரே லில் கிரிக்கெட் நடுவர் அவஸ்கார் இறந்தார். இவர்களுடன் சேர்த்து 1870 முதல் கிரிக்கெட் விளையாட் டில் காயமடைந்து 5 பேர் உயிரிழந் துள்ளனர். தற்போது இந்திய கிரிக்கெட் அணி, கிரிக்கெட் விளையாட்டுக்காக ஆஸ்திரேலி யாவுக்கு சென்றுள்ளது. ஆஸ்தி ரேலியாவில் இந்திய வீரர்கள் கிரிக் கெட் விளையாடுவது, அவ்வள வாக பாதுகாப்பானது இல்லை. எனவே, இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வரை ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட தடை விதிக்க வேண்டும். மேலும், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும் வரை ஏற்கெனவே முடிவு செய்யப் பட்ட கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.வேணு கோபால் முன் நேற்று விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் தரப் பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் குமார் வாதிட்டார். விசாரணைக்குப் பின், மனுவுக்கு பதிலளிக்க மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர், இந்திய கிரிக்கெட் வாரியத் தலை வர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், விசாரணை டிச.5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x