Published : 07 Apr 2014 12:15 PM
Last Updated : 07 Apr 2014 12:15 PM
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் கனகராஜ் (22). வாலாஜாபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி யில் பி.இ., சிவில் படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்று, கடற்கரை கோயில் அருகே கடலில் குளித்துள்ளார். அப்போது, ராட்சத அலையில் சிக்கி நாகராஜ், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். மதுரையைச் சேர்ந்த ஜனார்தனன் (17) காப்பாற்றச் சென்று அவரும் அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இவர்களின் உடலை போலீஸார் மீனவர்களுடன் தேடி வந்தனர். ஞாயிற்றுக்கிழமை நாகராஜின் உடல் சூலேரிக்காடு கடற் கரையிலும் ஜனார்தனின் உடல், மாமல்லபுரம் கடற்கரையிலும் கரை ஒதுங்கியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT