Published : 11 Apr 2014 02:29 PM
Last Updated : 11 Apr 2014 02:29 PM

தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பாமக புகார் மனு

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என சரிபார்ப்பதாகக் கூறி அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று பணம் பட்டுவாடா செய்வ தாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக வியாழக் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்று சரிபார்ப்பதாகக் கூறி வாக்கா ளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர். சில இடங்களில் பணம் வழங்கு வதற்கான டோக் கன்களை வழங்கு கின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளிடமும் முறைப்படி அனுமதி பெற்றிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் புகார் அளித்தாலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

எனவே வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரவீண்குமார் விளக்கம்

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறுகையில், வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தின்போது வீடுவீடாக கொண்டு செல்லலாமா என அதிமுகவினர் கேட்டனர். அதில் தவறு ஏதுமில்லை. இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். ஆனால், பணம் கொடுப்பது குற்றமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x