Published : 19 Dec 2014 11:26 AM
Last Updated : 19 Dec 2014 11:26 AM
ஆந்திர மாநிலத்தில் அண்மையில் வீசிய ஹூட்-ஹூட் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் என்எல்சி நிறுவனம் ரூ.1 கோடியை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை என்எல்சி தலைவர் சுரேந்திர மோகன், நேற்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து வழங்கினார்.
இதே புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை அந்த மாநில முதல்வர் நவீன்பட் நாயக்கிடம் என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன் வழங்கினார். அப்போது என்எல்சி மனித வளத்துறை இயக்குநர் சரத்குமார் ஆச்சார்யா உடனிருந்தார்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்துக்கு என்எல்சி ரூ.1 கோடி வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை ஜம்மு-காஷ்மீர் மாநில முதன்மை ஆணையர் லோகேஷ் டத்ஜாவிடம் வழங்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT