Published : 04 Dec 2014 10:01 AM
Last Updated : 04 Dec 2014 10:01 AM
சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை நடத்தும் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் படித்து தேர்வு பெற்ற 39 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், இருவருக்கு தமிழ்நாடு மாநிலப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மனிதநேய அறக்கட்டளை நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:
கடந்த 2013-14ம் ஆண்டு நடந்த குடிமையியல் தேர்வில், மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகத்தில் பயின்ற மாணவர்கள் 46 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 39 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 பேருக்கு பணி ஒதுக்கீடு நிலுவையில் உள்ளது.
இதில் ஜெயசீலன், பிரதீப்குமார் ஆகிய இருவருக்கும் தமிழ்நாட்டில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT