Published : 10 Dec 2014 10:13 AM
Last Updated : 10 Dec 2014 10:13 AM

சோனியா 69-வது பிறந்த நாள்: காங்கிரஸார் கொண்டாட்டம்

சோனியா காந்தியின் 69-வது பிறந்த நாளை தமிழக காங்கிரஸார் சிறப்பாக கொண்டாடினர். இதை யொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 69-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸார் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய் திருந்தனர். கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாந்தோம் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. வட சென்னை மாவட்டம் சார்பில் தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடும், மத்திய சென்னை மாவட்டம் சார்பில் சென்னை அண்ணா சாலை ஹசரத் சையத் மூசா ஷா காதிரி தர்காவில் சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது.

இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சிறப்பு ரத்த தான முகாமும், மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்த தானம் வழங்கினர்.

ஏராளமான பொது மக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ண சாமி, முன்னாள் அமைச்சர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் எம்எல்ஏ யசோதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்துவதற்காக டெல்லி சென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x