Published : 09 Dec 2014 11:13 AM
Last Updated : 09 Dec 2014 11:13 AM

மதுக் கொள்கையை மாற்றக் கோரி ஜன. 21-ல் கள் இயக்கம் உண்ணாவிரதம்

கேரளத்தைப் போல தமிழகத்திலும் மதுக் கொள்கையை மாற்றியமைக்க வலியுறுத்தி சென்னையில் வரும் ஜன. 21-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

10 ஆண்டுகளில் மதுவிலக்கு கொண்டு வருவதாக கேரள அரசு அறிவித்து, மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது.

எனவே, கேரளத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் மதுவிலக்கு மற்றும் மதுக் கொள்கையை மாற்றியமைக்க வலியுறுத்தி வரும் ஜன. 21-ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம் என்று நல்லசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x