Published : 16 Dec 2014 10:06 AM
Last Updated : 16 Dec 2014 10:06 AM

கோ-ஆப்டெக்ஸில் ‘ஜெயகார்த்திகா’ நவீன சேலைகள் அறிமுகம்

பண்டிகைகால விற்பனைக்காக கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனம் சார்பாக “ஜெயகார்த்திகா” என்ற புதிய ரக புடவைகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் பண்டிகை கால துணி ரகங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஆன்லைன் வணிகம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் கோகுல இந்திரா, கோ-ஆப்டெக்ஸ் ஆன்லைன் விற்பனை இணையதளம், எதிர்வரும் நாட்களின் பண்டிகை கால சிறப்பு விற்பனை துணிகளான “ஜெயகார்த் திகா” சேலைகள் மற்றும் ஆண்களுக்கு 100% பட்டால் நெசவு செய் யப்பட்ட சட்டைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.

தனியார் துணிகடைகளில் ஆன்லைன் வணிகம் செய்வது போல் இனிமேல் கோ-ஆப்டெக்ஸ் துணிகளையும் நுகர்வோர்கள் ஆன்லைன் வணிகம் செய்ய முடியும். இந்த ஆன்லைன் வணிகத்தில் முதற்கட்டமாக சுமார் 100 புடவைகள் பொதுமக்கள் வாங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கோகுல இந்திரா பேசும்போது, ‘‘பண்டிகை கால விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜெயகார்த்திகா புடவை ரூ.650 முதல் ரூ.1500 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் மொத்தம் 2.54 லட்சம் நெசவாளர்கள் உள்ளனர். பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள துணிகளை பொது மக்கள் வாங்க முன்வர வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் வெங்கடேஷ், துணி நூல் மற்றும் கதர் துறையின் அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.வி.மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x