Published : 23 Dec 2014 11:51 AM
Last Updated : 23 Dec 2014 11:51 AM

எஸ்எஸ்எல்சி தேர்வு அட்டவணையில் மாற்றமில்லை: அரசு அறிவிப்பு

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட எஸ்எஸ்எல்சி தேர்வுக்கால அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அரசுத்தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேர்வுகள் சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளுமே அரசு தேர்வுத்துறையால் அனைத்து மாவட்டங்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். தேர்வுக்கால அட்டவணை உள்ளிட்ட அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் மட்டும் கூடுதலாக செய்தி ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும்.

எனவே, அரசு தேர்வுத்துறையால் அளிக்கப்படும் பத்திரிகை செய்திகளை மட்டும் வெளியிடுமாறும், ஊகத்தின் அடிப்படையில் வெளியிடப்படும் செய்திகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x