Published : 16 Dec 2014 10:05 AM
Last Updated : 16 Dec 2014 10:05 AM

சென்னை வாகன சோதனையில் 12 ரவுடிகள் கைது

சென்னையில் நடத்தப்பட்ட அதிரடி வாகன சோதனையில், 12 ரவுடிகள் பிடிபட்டனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, கடந்த 13-ம் தேதி இரவு அதிக எண்ணிக்கை யிலான ரோந்து பணிகளும் அதிரடி வாகன சோதனைகளும் (Storming Operation) நடத்தப்பட்டன.

சிறுசிறு குழுக்களாக சோதனை

சோதனையில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளி களை கைது செய்யவும், கண்டு பிடித்து விசாரிக்கவும், அவர்களை கண்காணிக்கவும், நீதிமன்ற பிடி யாணைகளை நிறைவேற் றவும் மற்றும் வாகனத் தணிக்கை செய்யவும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர்கள் அடங்கிய பல சிறு குழுக்கள் பிரிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தங்கும் விடு திகளிலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் சந்தேகத்தின் பேரில் 715 பேரும், பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 32 பேரும், ரவுடிகள் 12 பேரும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 74 பேரும் பிடிபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x