Published : 08 Dec 2014 12:46 PM
Last Updated : 08 Dec 2014 12:46 PM
கூடுவாஞ்சேரியில் கலப்பட பெட்ரோல் விற்பனை செய்த 2 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கூடுவாஞ்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கலப்பட பெட்ரோல் சில்லறை விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரியின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் நேற்று முன்தினம் தீவிர சோதனை நடத்தினர். இதில், மீன் மார்க்கெட் பகுதியில் உதயா என்பவரும், மாடம்பாக்கம் பகுதியில் மதுராந்தகத்தை சேர்ந்த பாபு என்பவரும் கலப்பட பெட்ரோல் விற்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
பாபுவிடம் 10 லிட்டர் கலப்பட பெட்ரோலையும், உதயாவிடம் 3 லிட்டர் கலப்பட பெட்ரோலையும் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT