Published : 13 Dec 2014 03:48 PM
Last Updated : 13 Dec 2014 03:48 PM

கால்நடை அறிவியல் பல்கலை.க்கு புதிய துணைவேந்தர்

தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் எஸ்.திலகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் எஸ்.விஜயக்குமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக ஆளுநரும், பல்லைக்கழக வேந்தருமான ரோசய்யா உத்தரவின்படி தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் எஸ்.திலகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் ஊடுகதிரியக்கவியல் துறையின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x