

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர் 2014) ரூ.259.35 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டிற்குரிய முதல் அரையாண்டு மற்றும் 2-ம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று சென்னையில் நடைபெற்ற இயக்குநர் குழுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.