கிராமப்புற மாணவர்களுக்கு கணினி பயிற்சி

கிராமப்புற மாணவர்களுக்கு கணினி பயிற்சி
Updated on
1 min read

சென்னை தண்டலத்தில் உள்ள சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனமும் இணைந்து கிராமப்புற மாணவர்களுக்கு கணினி பயிற்சி முகாமை நடத்தின.

ஸ்ரீபெரும்புதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி, மொளச்சூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ஆன்-லைன் மூலம் வழங்கிய சான்றிதழ்களை கல்லூரி தலைவர் ஆர்.ராஜசேகரன் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினார்.

கல்லூரி துணைத் தலைவர் ஆர்.அருண்குமரன், முதல்வர் எஸ்.இராமகிருஷ்ணன், செயலர் என்.நடராசன், மக்கள் தொடர்பு அலுவலர் என்.இராசகோபால் ஆகியோர் முகாமில் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.

கல்லூரியின் கணினிப் பொறியியல் துறை பேராசி ரியர் ஜி.இளங்கோவன், அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.செல்வரங்கம் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in