Published : 06 Jul 2019 05:57 PM
Last Updated : 06 Jul 2019 05:57 PM
டிடிவி தினகரன் தனிமையில் உள்ளார். அவருக்கு கார் ஓட்டும் டிரைவர் கூட விரைவில் அவரை விட்டு வெளியேறி வந்து விடுவார் என சிவகாசியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "டிடிவி தினகரன் தனிமையில் உள்ளார். அவருக்கு கார் ஓட்டும் டிரைவர் கூட விரைவில் அவரை விட்டு வெளியேறி வந்து விடுவார் .டிடிவி தினகரனைப் பொருத்தவரையில் எல்லாமே தன்னைச் சுற்றியே இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கின்றார். குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்சியை கொண்டுபோக டிடிவி தினகரன் நினைத்து செயல்பட்டார். ஆனால் எதுவும் எடுபடவில்லை.
வைகோ ஒரு தமிழின போராளி. வைகோவிற்கு ஒரு ஆண்டு தண்டனை கொடுத்தது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தமளிக்கின்றது" என்றார்.
முன்னதாக, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுமையைதான் மத்திய அரசு மக்கள் மீது வைக்கும். அதை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால், மக்கள் சுமக்க முடியாத சுமைகளை மக்கள் மீது மத்திய அரசு வைத்தால் அதை எதிர்த்து தமிழக அரசு குரல் கொடுக்கும்" எனக் கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT