Published : 02 Jul 2019 12:00 AM
Last Updated : 02 Jul 2019 12:00 AM
புதுச்சேரி நகர் பகுதியில் இருக் கிறது திருவள்ளுவர் அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளி. 1943-ம் ஆண்டு இப்பள்ளி தொடங் கப்பட்டது. பள்ளி தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன.
இப்பள்ளியில் பயின்ற முன் னாள் மாணவிகள் இணைந்து முன்னாள் மாணவிகள் சங்கத்தை கடந்தாண்டு இறுதியில் உருவாக் கினர். இச்சங்க உறுப்பினர்கள் தற்போது ஆட்சியர், மருத்துவர், பொறியாளர், கல்லூரி பேராசி ரியர், அரசு அதிகாரிகள் என பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ளனர். அவர்கள் ஒன்று கூடி பள்ளிக்கு தேவையானது எதுவென்று பட்டியலிட்டு, அதைச் செய்திருக்கின்றனர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவி களுக்காக இரு எல்சிடி ப்ரொ ஜெக்டர்கள் மற்றும் இரு ஸ்மார்ட் போர்டுகளை தந்துள்ளனர். பாதுகாப்பு வசதிக்காக 8 சிசி டிவி கேமராக்களை பொருத் தியுள்ளனர். அதை பார்வையிடும் வசதி துணை முதல்வருக்கு தரப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டாலும் தடையின்றி பயில இன்வெர்ட்டர், எல்இடி டிவி, கம்ப்யூட்டர் பிரிண்டர், ஒரு ஏசி உள்ளிட்ட வசதிகளை தாங்கள் பயின்ற பள்ளிக்கு உருவாக்கி தந்துள்ளனர்.
அத்துடன் மாணவிகள் அமரும் இருக்கைகளுக்கும் தங்கள் செலவில் வர்ணம் பூசியுள்ளனர். பள்ளி விழா நாட்களில் மாண விகள் அமர 350 சேர்கள், ஆடியோ சிஸ்டம், விளையாட்டு சாதனங் கள், அலமாரிகள் என பள்ளிகளின் பலத் தேவைகளை பார்த்து பார்த்து செய்து தந்துள்ளனர்.
இதுபற்றி முன்னாள் மாணவிகள் சங்க பொதுச் செயலர் டாக்டர் கல்பனா கூறுகையில், "இந்த அரசு பள்ளியில் படித்து தான் ஏராளமான பெண்கள் முன்னேறியுள்ளோம். எங்கள் பள்ளிக்கு 75 வயது ஆவதை யொட்டி சங்கம் தொடங்கி இணையத் தொடங்கினோம். 75 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியாற்றும் 300 ஆசிரியர்களை அழைத்து விழா நடத்தி கவுரவித்தோம்.
நிதி திரட்டி எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான விஷயங்களை செய்திருக்கிறோம். இதை ரூ. 10 லட்சத்தில் செய்துள்ளோம். பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெறுவோ ருக்கு பரிசு தரவும், நன்கு பயி லும் குழந்தைகளின் முன்னேற் றத்துக்கு உதவவும் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கியிருக்கிறோம்; அதில், ரூ. 1.5 லட்சம் வரை நிதி வைத்து பள்ளியிடம் ஒப்படைத் துள்ளோம். நாங்கள் பயின்ற பள்ளியில், இப்போது பயிலும் குழந்தைகளின் நலனுக்காக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி." என்று குறிப்பிட்டார்.
பள்ளி துணை முதல்வரும், சங்கத்தின் கவுரவத் தலைவரு மான செல்வ சவுந்தரி கூறுகையில், "முன்னாள் மாணவிகள் சங்கத்தை தொடங்கிய 6 மாதங்களில் இந்தப் பணிகளை செய்திருக்கின்றனர். இதன்மூலம் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் முதலாவதாக 8 சிசிடிவி கேமராக்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பள்ளி முழுக்க எளிதாக கண்காணிக்க முடிகிறது. வீட்டுக்கு சென்றாலும் என் மொபைல் மூலமாகவும் பள்ளி வளாகத்தை கண்காணிக்கலாம். 'ஸ்மார்ட் போர்டு' மூலம் பொதுத்தேர்வு மாணவிகளுக்கு பாடம் நடத்தும்போது, அவர்களின் திறன்மேம்படுவதை எங்களால் உணர முடிகிறது" என்கிறார் உற்சாகமாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT