Last Updated : 09 Jul, 2019 04:13 PM

 

Published : 09 Jul 2019 04:13 PM
Last Updated : 09 Jul 2019 04:13 PM

பொள்ளாச்சி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: மேலும் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.  

பொள்ளாச்சியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பைத் தொடர முடியாமல் பொள்ளாச்சியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி இருந்த சிறுமியை 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.

இந்நிலையில், சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சி ஜீவா காலனியைச் சேர்ந்த அமானுல்லா(27), சுந்தரம் லே-அவுட்டினைச் சேர்ந்த பகவதி என்கின்ற முகமது அசரப் (28), செரீப் காலனியைச் சேர்ந்த முகமது ரபீக்(28), குமரன் நகரைச் சேர்ந்த செய்யது இப்ராகிம் (25), வசியாபுரத்தைச் சேர்ந்த முகமது அலி(28), மடத்துக்குளத்தைச் சேர்ந்த அருண் நேரு (28), அழகாபுரி வீதியைச் சேர்ந்த டேவிட் என்கின்ற செந்தில்குமார் (30), சிடிசி காலனியைச் சேர்ந்த இஸ்ரத் பாஷா(28), பத்ரகாளியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த இஸ்ரத் முகமது (25) ஆகிய 9 பேரை போக்சோ சட்டத்தில் பொள்ளாச்சி மகளிர் போலீஸார் கடந்த 6-ம் தேதி கைது செய்தனர்.

பிரபு என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார், வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து போலீஸார் பிரபுவைத் தேடி வந்தனர். மேலும், வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதியில் பதுங்கியிருந்த  பிரபு (எ) மணிகண்டனை (22) திங்கள்கிழமை தனிப்படை போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x