Published : 03 Jul 2019 03:55 PM
Last Updated : 03 Jul 2019 03:55 PM

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காது: நாராயணசாமி திட்டவட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. புதுச்சேரி அரசின் அனுமதியின்றி திட்டங்களை மேற்கொள்ள முடியாது. நிச்சயமாக புதுச்சேரி அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்காது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று (புதன்கிழமை) கூறியதாவது:

''புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தமில்லை. தமிழர்களின் வீரம் பற்றி அவருக்குத் தெரியாது. இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகமும் எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். மக்களவையிலும் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரண்பேடி ஆளுநர் பதவிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர் கடமையாற்ற வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஓஎன்ஜிசிக்கு மட்டுமின்றி வேதாந்தா நிறுவனத்திற்கும் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. புதுச்சேரி அரசின் அனுமதியின்றி அவர்கள் திட்டங்களை மேற்கொள்ள முடியாது. நிச்சயமாக புதுச்சேரி அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்காது. விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x