Published : 06 Jul 2019 07:52 AM
Last Updated : 06 Jul 2019 07:52 AM

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாடு; டயாலிசிஸ் சிகிச்சை பாதிக்கப்பட்டதால் சிறுநீரக நோயாளிகள் தவிப்பு

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக  டயாலிசிஸ் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  சிறுநீரக நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள அரசுமருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் ஏழை நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தினமும் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்யப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் தற்போது  டயலிசிஸ் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டாக்டர்களிடம் கேட்டபோது, “காலை 6 மணிக்குடயாலிசிஸ் சிகிச்சை  தொடங்கிவிடும். பணியாளர்கள் 5.30 மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். ஆனால், மருத்துவமனையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் 10 மணிக்கு பின்னர்தான் டயாலிசிஸ் சிகிச்சையை தொடங்க வேண்டியுள்ளது. நேரம் இல்லாததாலும், தண்ணீர் பிரச்சினையாலும் 10 பேருக்கு டயாலிசிஸ் செய்வதே கடினமாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு விடிய விடிய டயாலிசிஸ் சிகிச்சைகள் நடைபெற்றன. இந்த மருத்துவமனைக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

நோயாளிகளிடம் கேட்ட போது,

“தண்ணீர் இல்லாததால் டயாலிசிஸ்செய்ய முடியவில்லை எனக்கூறி நோயாளிகளை திருப்பி அனுப்புகின்றனர். சில தினங்களுக்கு முன்பு தாமதமாக டயாலிசிஸ்செய்ததால் 4 நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டனர். அவர்களை காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x