Published : 08 Jul 2019 08:03 AM
Last Updated : 08 Jul 2019 08:03 AM
மாநிலங்களவை உறுப்பினர் பத விக்கு எனது வேட்புமனு ஏற்கப் படுமா எனச் சொல்ல முடியாது. அதுகுறித்து ஜூலை 9-ம் தேதி (நாளை) நடைபெறும் பரிசீலனை யின்போதுதான் தெரியவரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மக் களை அதிமுக அரசு ஏமாற்றி வந்துள்ளது. மாநில அரசை மத்திய அரசு நம்பவைத்து ஏமாற்றிவிட் டது. நீட் தேர்வில் அதிக மதிப் பெண்களை பெற முடியாததால், 6 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதெல்லாம் தெரிந்திருந்தும், வேண்டும் என்றே அந்த தீர்மானங் களை கிடப்பில்போட்டு, தற்போது நயவஞ்சகமாக இக்காரியத்தை செய்துள்ளனர். இது, தமிழகத் துக்கு மத்திய அரசு செய்துள்ள பெரும் அநீதி.
மாநிலங்களவைத் தேர்தலுக் கான என்னுடைய வேட்புமனு ஏற்கப்படுமா என சொல்ல முடி யாது. ஜூலை 9-ம் தேதி (நாளை) நடைபெறும் பரிசீலனையின் போதுதான், மனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா எனத் தெரியும். அதுவரை தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும். நான் மாநிலங்களவைக்கு செல்லக் கூடாது என யாரும் சதி செய்வதாக நான் நினைக்கவில்லை. வேட்பு மனு பரிசீலனை இருப்பதால், எதுவும் சொல்ல விரும்பவில்லை. முகிலன் உயிருடன் திரும்பி வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத் தும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT