ஞாயிறுதோறும் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு: செங்கல்வராயர் அறக்கட்டளை நடத்துகிறது

ஞாயிறுதோறும் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு: செங்கல்வராயர் அறக்கட்டளை நடத்துகிறது
Updated on
1 min read

நீட் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ்.ஜவஹர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும்‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், திறமையை மட்டுமே கருத்தில் கொண்டு கட்டணம் ஏதுமின்றி நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள்  அனைவருக்கும் 'நீட்- 2020' போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளதாக தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ்.ஜவஹர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ''பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர் சிறப்புப் பள்ளி சார்பில் 'நீட்- 2020' போட்டித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஓராண்டுக்கு ஞாயிறுதோறும் நடைபெற உள்ளது. பின்னர் ஏப்ரல் மாதம் முழுவதும் நாள்தோறும் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதற்கான இலவச அறிமுக வகுப்பு ஜூலை 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் அமைந்துள்ள பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில்  நடைபெறும். இதில் சேர ஆர்வமும், விருப்பமும் உள்ள மாணவர்கள் உடனடியாக 044-26430029, 8668038347  தொலைபேசி எண்களை அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in