Published : 04 Jul 2019 05:17 PM
Last Updated : 04 Jul 2019 05:17 PM
இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதை வாரிசு என்ற அடிப்படையில் பார்க்காதீர்கள் என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திமுகவின் முக்கியப் பதவிகளில் ஒன்றான இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 32 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாலின் வகித்த அப்பதவி, தற்போது உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறிய ஜெ.அன்பழகன், ''திமுகவின் முதுகெலும்பு இளைஞரணி என்று கருணாநிதியே பாராட்டியுள்ளார். பொதுத்தேர்தலில் தமிழகம் முழுவதும் உதயநிதி செய்த பிரச்சாரம் நன்றாக எடுபட்டது. இளைஞர்களிடையே வரவேற்பும் அதிகமானது. அந்த வகையில், இளைஞரணியை வழிநடத்த உதயநிதி பொறுப்பேற்றுள்ளார்.
திரைப்பட நடிகராகவும் இருப்பதால், பொதுமக்களிடையே வரவேற்பும் அதிகமாக இருக்கும். வாரிசு என்ற அடிப்படையில், எதையும் பார்க்கக்கூடாது. அவருடைய மகன், இவருடைய மகன் என்றெல்லாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை. அவருக்குத் திறமை இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் இந்தப் போக்கு உள்ளது. திமுக என்று மட்டுமே பார்க்கக்கூடாது. காஷ்மீரில் கூட வாரிசுகள் பதவியில் உள்ளனர். இதைக் குறையாகச் சொல்லவில்லை. வாய்ப்பாகப் பாருங்கள்'' என்றார் அன்பழகன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT