Published : 12 Jul 2019 05:01 PM
Last Updated : 12 Jul 2019 05:01 PM
திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசி, தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை நீக்க உதவ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தரம் பேசும்போது, உத்திரமேரூர் தொகுதியில் காலக்கெடு முடிந்தபிறகும் சில சுங்கச்சாவடிகள் மக்களிடம் பணம் வசூலித்துவருகின்றன. அவற்றை அரசு அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ''தமிழகத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருந்தபோதுதான் சுங்கச் சாவடிகள் வந்தன. திமுக, அதிக எண்ணிக்கையில், எம்.பி.க்கள் உள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசி உதவ வேண்டும்'' என்றார் பழனிசாமி.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் நீங்கலாக தமிழகத்தின் 38 தொகுதிகளில், திமுக 37 இடங்களில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT