காயிதே மில்லத் கல்லூரியின் 30 ஏக்கர் வனத்துறை நிலம்: அரசிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

காயிதே மில்லத் கல்லூரியின் 30 ஏக்கர் வனத்துறை நிலம்: அரசிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

திமுக ஆட்சியில் காயிதே மில்லத் கல்லூரிக்கு வழங்கப்பட்ட 30 ஏக்கர் வனத்துறை நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மேடவாக்கம் காயிதேமில்லத் கலைக்கல்லூரி பயன்பாட்டுக்கு 40 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. கடந்த 2001-ஆம் ஆண்டு கல்லூரி பயன்படுத்திய 10 ஏக்கர் நிலத்தை தவிர பயன்படுத்தாத 30 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசின் உத்தரவுக்கு ஆதரவாக தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீண்டகாலமாக வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. நீண்ட விசாரணைக்குப்பின் இந்த வழக்கில் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது.

ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தாத 30 ஏக்கர் நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பயன்படுத்திய பத்து ஏக்கர் நிலத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டவும், அது குறித்து ஆறு மாதத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in