Last Updated : 12 Jul, 2019 04:53 PM

 

Published : 12 Jul 2019 04:53 PM
Last Updated : 12 Jul 2019 04:53 PM

மதுரையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு: தடுமாறி கீழே விழுந்தவர் உயிருக்கு போராட்டம்

மதுரையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு நடந்துள்ளது. செயின் பறிப்பின்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை ஊமச்சிகுளம் ஜெயபாரத் குடியிருப்பைச் சேர்ந்தவர் நாகராஜன்(63). அரசுப் பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று  மாலை முனிச்சாலையிலுள்ள தனது சகோதரரைப் பார்க்க, நாகராஜன் தனது மனைவி ஜானகியுடன் பைக்கில் சென்றார்.

கடச்சனேந்தல்- ஊமச்சிகுளம் ரோட்டில் இவர்களை மற்றொரு பைக்கில் 3 பேர் பின் தொடர்ந்தனர். ஆலமரம் என்ற இடத்தில் சென்றபோது, கணவரின் பின்னால் உட்கார்ந்து இருந்த ஜானகியிடம் அவர்கள் 7 பவுன் செயினை பறித்து தப்பினர்.

நிலை தடுமாறி கீழே விழுந்த ஜானகிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் புதூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x