Published : 30 Jun 2019 07:36 PM
Last Updated : 30 Jun 2019 07:36 PM
அதிமுக அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது கடந்த திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிக்கடன் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்றார்.
இந்நிலையில் அவர் கூறியதாவது:
நகைக் கடன் தள்ளுபடி பண்றேன் நகைக்கடன் தள்ளுபடி பண்றேன் என்று சொல்லி ஓட்டை வாங்கினாரே ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியில் 2007,08, 09,10, 11-ல் கூட்டுறவு வங்கியில் நகைக்கடனைப் பெற்றுத்தருவதாகச் சொல்லியும் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கடனைப் பெற்றுத் தருவதாகவும் சொல்லி முறைகேடு நடந்திருப்பதாக நாங்கள் சொல்லவில்லை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு ஆணைப் பிறப்பித்துள்ளார்.
என்று கூறினார் சி.வி.சண்முகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT