Published : 29 Jun 2019 03:49 PM
Last Updated : 29 Jun 2019 03:49 PM
புதுக்கோட்டையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது ரயில் மோதி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மச்சுவாடியைச் சேர்ந்தவர் குமாரவேல். ஓய்வுபெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர். இவரது மனைவி ரேவதி. இவர், புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது மகன் மணிகண்டன் (19). இவர், புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் படித்து வரும் குளத்தூரைச் சேர்ந்த மகேந்திரனும்(19) நேற்று (வெள்ளிக்கிழமை) புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றுப் பாலத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்து கொண்டிருந்த மானாமதுரை- மன்னார்குடி ரயிலோடு சேர்த்து இருவரும் செல்ஃபி எடுக்க முயன்றதில் எதிர்பாராத விதமாக இருவர் மீதும் ரயில் மோதியது. இதில், மணிகண்டன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த மகேந்திரனை அருகிலிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காரைக்குடி ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT