Published : 31 Aug 2017 09:59 AM
Last Updated : 31 Aug 2017 09:59 AM

தற்போது தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை: தமிழிசை

‘தமிழகத்தில் தற்போதைக்கு தேர்தல் வருவதற்கு வாய்ப்பில்லை, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஆளுநர் செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் நினைப்பது சரியல்ல’ என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது என ஆளுநர் கூறியுள்ளார். தமிழக அரசியல் சூழலை ஆளுநர் சிறப்பாக கையாளுகிறார். அதற்கேற்ப அவர் நல்ல முடிவை எடுப்பார். தங்கள் விருப்பத்துக்கு ஆளுநர் செயல்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் நினைப்பது தவறு.

தமிழக அரசு, கட்சி பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு நிர்வாகத்தை கவனிக்க வேண்டும். தற்போதைய ஆளும்கட்சிக்கு மாற்றாக திமுக நிச்சயம் இருக்க முடியாது. தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு திமுகவும் ஒரு காரணம் என்றார்.

தமிழகத்துக்கு தேர்தல் வந்தால், அதில் திமுக வெற்றி பெறும் என கூறப்படுகிறதே எனக் கேட்டபோது, ‘தேர்தல் வந்தால் பார்த்துக் கொள்ளலாம், எனக்கு தெரிந்து, தற்போதைய சூழலில் தேர்தல் வர வாய்ப்பில்லை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x