Last Updated : 23 Aug, 2017 08:38 AM

 

Published : 23 Aug 2017 08:38 AM
Last Updated : 23 Aug 2017 08:38 AM

விவசாயி தற்கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

சுங்குவார்சத்திரத்தை அடுத்த பிச்சிவாக்கம் துர்க்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து(45). விவசாயியான இவர் அதே பகுதியில் உள்ள தனது இடத்தில் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி வருகிறார். வீடு கட்டும் இடம் தொடர்பாக அவருக்கும், அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் வீடு கட்டும் பணியை நிறுத்தினர்.

இதனால் மனம் உடைந்த முத்து நேற்று முன்தினம் மாலை தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் முத்துவின் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து பிச்சிவாக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் திடீரென்று பேரம்பாக்கம் - தண்டலம் சாலையில் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் துணை கண்காணி்பாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீஸார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x