Published : 12 Jun 2017 12:26 PM
Last Updated : 12 Jun 2017 12:26 PM

முடிவை பரிசீலியுங்கள்: ஓபிஎஸ் அணிக்கு ஜெயக்குமார் வேண்டுகோள்

இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில் அவரது முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அதிமுகவின் நலன் கருதி இரு அணிகளும் இணைய வேண்டும். இரு அணிகளும் இணையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். பிரிந்த சென்ற சகோதரர்கள் மீண்டும் வந்துசேர வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x